110
அவர் இந்த மதம், அவன் அந்த மதம், என்று குரோதம் கொள்ளாதீர் என்றார். இது பெரியது இன்னொன்று தாழ்ந்தது என்று எண்ணாதீர் என்றார். தீண்டாமை போகவேண்டும் என்றார், அமளிக்கிடையே நின்று படுகொலைகள் நடைபெற்ற இடத்திற்கெல்லாம் சென்று கூறிவந்தார்.
🞸🞸🞸
மக்களை நல்லவர்களாக்க வேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம், சுயநலம், ஆதிக்க எண்ணம் ஒழிந்தாக வேண்டும்.
🞸🞸🞸
தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு, அதைப் புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக. அழகிய மலர்ச் செடிகளுக்கான விதைகளைத் தூவ அங்கு சென்றபோது புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வது போல், நாட்டை மீட்டு நல்லாட்சி அமைத்து, மக்களை நல்லவர்களாக்குவதற்காகக் கருத்தைப் பரப்பும்போது, கோட்சே கிளம்பினான்.
🞸🞸🞸
மறைந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும்பாம்பை ஒழித்தாக வேண்டும். அவர், 'அனைவரும் ஒன்று' என்னும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார். அதை நாம் செய்து முடிப்போம், என்பதே நமது உறுதியாக இருக்கவேண்டும்.