பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


இந்த மகிழ்ச்சியால் வெறும் ஊக்கத்தையும் உணர்ச்சியையும் சமுதாயத்துறையில் உள்ள சீர்கேடுகளைப் போக்கவும், மக்களிடையே மேலும் தீவிரமான முறையில் அறிவுப் பணி புரியவும் பயன்படுத்தி பாடுபடவேண்டும்.

சமுதாயம் சீர்திருந்த இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நல்லதொரு அடிப்படை என்று குறிப்பிட்டேன்.

எந்தக் காரணங்களைக்கொண்டு பார்த்தாலும் நாம் இந்த சீர்திருத்தத் திருமணம் நடத்தும் முறை தவறு என்று எடுத்துக் காட்டவோ அல்லது பழைய முறைதான் சரி என்று வாதிடவோ ஒருவராலும் முடியாது.

இந்நிலையில் நாம் அறிவுத் துறையில் முன்னேறவும் சமுதாயம் சீர்திருந்தவும் அடிப்படையான இத்தகைய சீர்திருத்தத் திருமணங்களைத் தொடர்ந்து செய்துவர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.