பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


"ஒரு இழவும் கிடையாதுங்க. ஆனா இங்கே நான் வந்ததிலே இருந்து, எங்க அம்மா காலடி எடுத்து வைக்கிறதில்லே, அது என்ன வைராக்கியமோ போங்க. என் கல்யாணத்துக்கூட பத்துபேர் வர்ரதுபோல வந்துவிட்டு ஒரு வேளை கையை நனைச்சிகிட்டுப் போனதுதான். கான் காலிலே விழுந்து கும்பிட்டுக் கூப்பிட்டாக்கூட வரமாட்டேங்குது--காரணம சொல்றதில்லே. எனக்குச் சில சமயம் வருகிற கோபம், அதை வெட்டிப்போட்டுவிடலான்னு கூட தோணுது போங்க. 'உங்க அம்மா அங்கே பிச்சை எடுத்துக் கிட்டு இருக்கிறாடப்பா ஏன் அப்படி அலையவிடறேன்னு யாராவது கேட்டா, என் மனசு என்ன பதறிப்போகும் நீங்களே சொல்லுங்க. இப்படி என்மனசை எறியச் செய்து கிட்டு, அங்கே கிடக்குது. நான் என்ன செய்ய?"

"சன்னாசி, கோபிக்காதே! உன் சம்சாரத்தோடே ஏதாச்சும்..

"அவ 'அப்பிராணீங்க--மாமியார் காலிலே விழுந்து கும்பிட்டா புண்ணியமனு எண்ணுகிறவ. அவளும் அவளாலே ஆனமட்டும் கூப்பிட்டுப் பாத்தாச்சி. நம்ம 'கொழந்தை'கள் கூப்பிட்டே வரலே, போங்களேன்."

"என்னப்பா இது அதிசயமா இருக்கு."

"அதிசயமா? அக்கிரமம்னு சொல்லுங்க டாக்டரய்யா! வர்ர பழி வரட்டும்னு அதை அடிச்சுக் கொண்ணுபோட லாம்னுகூட ஆத்திரம் வருது தெரியுங்களா?"

டாக்டர் பாதிரியப்பனுக்குப் பச்சிலை ஆராய்ச்சியிலே கூட மனம் செல்லவில்லை. இந்தக் கிழவியின் விசித்திரம் போக்கு அவருக்கு மனக்குழப்பமே உண்டாக்கிவிட்டது. கிழவியைக் கண்டே கேட்பது என்று தீர்மானித்தார்.

000