பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


கருத்துக்களுக்காக, ஏழை எளியோரைப்பற்றித் தீட்டிய எழுத்தோவியங்களுக்காக, மூடத்தனம், வெளிவேடம் அநீதி, சுரண்டல் முறை, போர்இவைகளை எதிர்த்த எழுதியதற்காக மட்டுமல்ல; சமயம் நேர்ந்த பொழுது தனது தள்ளாத வயதில் பலமிக்க இராணுவம், அதிகாரமுள்ள அரசாங்கம் அனைத்தையும் எதிர்த்துத் தனியாக நாட்டையும் வீட்டையும் விட்டோடிப் போராடிய திறத்திற்காக ஜோலா உலக வரலாற்றிலே இடம் பெற்று விட்டார். "பிரான்சு நாட்டிற்குப் பலவகைகளில் தன் உழைப்பைச் செலுத்தலாம் ஒருவன் வாளேந்தியோ, பேனாவைப் பிடித்தோ தன் கடமையை நிறைவேற்றலாம்; என் பங்கில் எமலி ஜோலா என்ற பெயரை வருங்காலத்திற்கு வழங்குகிறேன். அது இரண்டிலொன்றை ஆராய்ந்து அடைவதாக என்று ஜோலா கூறினார். வருங்காலம்--பின் சந்ததி ஜோலாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.


ஜோலா ஓய்வேயறியாத உழைப்பாளி. அவருடைய வாழ்வு ஏமாற்றங்கள் நிறைந்ததாயிருந்தது. குறிப்பாக பிரெஞ்சு இலக்கிய மன்றம் அவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க மறுத்தது. ஆனால் பிரெஞ்சு மொழி இலக்கிய ஆசிரியனாகவல்ல, உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தை ஜோலா அடைந்து விட்டார்.

"எதை எழுதுவது?" என்றோர் நாள் நம் கவிஞருக்குச் சந்தேகம் பிறந்தது. தாமரை தன் அழகைக்காட்டி எழுதச் சொல்லிற்றாம், காடும் கழனியும், கார்முகிலும், கலாப மயிலும், மருலனைய மாதரும். செவ்வானமும், அன்னமும். வீரமும், பிறவும், என்னைப்பற்றி எழுது! என எழிலைப் பற்றித் தீட்டு என்று கூவின, கவிஞர் கூறுகிறார் கேளுங்கள். ஜோலாவின் உணர்ச்சி அதிலே உள்ளதைக் காணுங்கள்.