பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 9

நாடு' என்ற கூற்றுகளையும் அவர் வகுத்து விளக்க முற்பட்டுள்ளார்.

புனைந்துரையன்று, வரலாறே!

தமிழகத்தின் வீரப்புகழ் வெறும் புனைந்துரையன்று, மிகை யுரையன்று; வரலாறு காட்டும் செய்தியேயாகும். கவிஞர் பாரதியார் அவ்வரலாற்றுச் செய்திகளைத் திரைப்படக்காட்சிகளைப் போல நம் முன் ஓடச் செய்கின்றார்;

"விண்ணை இடிக்கும் தலைஇமயம் -எனும்
வெற்பை அடக்கும் திறலுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் -தமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு"

நில எல்லையில் தமிழர் பண்டைப் பெருவெற்றிகள் இமயத்தை அடக்கின. தமிழ் மூவேந்தரும் வில், கயல், புலி ஆகிய முத்தமிழ்க்கொடிகளையும் இமயமலையுச்சியில் பொறித்தார்கள். நில உலகத்தின் கூரை எனப்படும் இமயம் தமிழர் வீரப் புகழை வானகத்துக்கு எடுத்துரைத்தது. அது தமிழர் தம் கொடி மரமாகவே அன்று நிலவிற்று. அத்துடன் இமயத்தையடுத்த வடநாடாகிய கங்கை நாட்டையும் இடை நாடுகளாகிய வங்கத்தையும், கலிங்கத்தையும் வென்று அவர்கள் போர்ப் பரணி பாடினார்கள்.

கரிகால சோழன் இமயங்கடந்து மேருமலையின் உச்சியையே தாக்கினான்; அதைத் தன் செண்டாயுதத்தால் அடித்து அதன் தருக்கை அடக்கினான்; அதன் முன்புற நெற்றியில் மட்டுமன்றிப் பின்புறத்திலும் தன் புகழ் எழுதுவதற்காக, அவன் அதன் தலையைத் திருகினான்; இருபுறங்களிலும் தன் புலிக்கொடி பொறித்து, வடதிசைப் பெருமன்னரிடம் பெரும் பொருள் நிறைகொண்டு மீண்டான்.

சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரைகடந்து ஆரிய அரசர் கனகன், விசயன் ஆகியவர்களை முறியடித்தான், அவர்கள் தலைகள் மீதே இமயமலையின் பெருங்கல்லொன்றை ஏற்றிக் கொண்டு தமிழகத்துக்கு வந்தான். தன் தலைநகராகிய வஞ்சியில்