பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இதயததில் தவழ்ந்தாய் தாயின்
எழில்நகில் தவழ்ந்தாய் உள்ளம்
புதிதான் உணர்வு பொங்க
புரண்டாய்என் மார்பின் மீது!
சதகோடி இன்பஞ் சேர்க்கும்
தமிழ்வடி வான கண்ணே
முதலிரா காத லின்ப
முகங்காட்டித் தவழ்ந்து வாராய்!

கற்பனைக் கவிதை ஏட்டில்
கலத்தலாய் தவழ்ந்து வாராய்!
பொற்கதிர் கடலில் நீந்திப்
பூரிக்கும் கனவாய் வாராய்!
கற்சுவர் ஒவி யத்தின்
கலையெனத் தவழ்ந்து வாராய்!
அற்புதத் தென்றல் பண்ணின்
அலையெனத் தவழ்ந்து வாராய்!

10