பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 173


பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான்படர்
ஒலை ஏய் நெடுங்கடல் ஓடிற் றில்லையால்;
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம் வேலையே மடுத்தது அக்கங்கை வெள்ளமே

(4)

திருவடி சூட்டு படலம்

பாலை நிலத்தில் பரதனுடன் வந்த பெரிய படை சென்றதால் மிகுதியாகத் துரசி பறந்தது. அந்தத் தூசியால் ஞாயிற்றின் வெப்பம் ஆறியது. யானைகள் பொழிந்த மத நீரால் பாலைவன மணல் சேறாகியது; சேறு வழுக்குவதால் தரையில் நடக்க முடியவில்லை.

எழுந்தது துகள் அதின் எரியும் வெய்யவன் அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் பொழிந்தன கரிமதம் பொடி வெங்கானகம் இழிந்தன வழிநடந்து ஏற ஒண்ணாமையே

(21)

பாலை நிலத்து மணலில் எவ்வளவு நீர் சொரியினும் உள்ளே இழுத்துக் கொள்ளும். அத்தகைய பாலை மணல் வழுக்கும் அளவுக்கு யானைகள் மத நீர் சொரிந்தன என்ற கற்பனை, யானைகளின் மிகுதியை உணர்த்துகிறது.

கம்பனது கற்பனைச் சுவை அளப்பரியது. கம்பனது கற்பனைக் கடலில் மூழ்கி முழுதும் ஆழம் கண்டு முத்தெடுத்து வருவது அரிய செயலாகும்.