பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

கொள்கிறோம். இதனால் உதவி செய்தவர் பணி செய்தவர் மனமகிழ்ச்சி அடைகின்றார். நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறோம், அந்தப் பழக்கம் நம் பேச்சுக் கூட்டத்திலும் மேற்கொண்டு வருகிறோம். கூட்டம் முடிந்ததும் ‘நன்றி நவிலல்’ என்னும் சம்பிரதாயம் இங்கு நடைமுறையில் உள்ளது. இது மேல் நாட்டுப் பழக்கம்.

புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது அவரைப் பார்த்து ‘வணக்கம்’ சொல்லுதலும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட பழக்கம். ‘நல்ல நாள் ஆகுக’ (good morning) என்று சந்தித்து ஒருவரை ஒருவர் நல்லுரை பேசிச் சந்தித்துக்கொள்கிறோம். பேசுவதற்கு முன் ‘ஹல்லோ’ என்று சொல்லுவதும் மேல் நாட்டுப் பழக்கம். மாலை வேளைகளில் தனியே சலைகளில் உடல் நலத்துக்கும், அடங்கிக் கிடக்காமல் இருப்பதற்கும் வெளியே சுற்றி நடந்து வருவேன்; வயது மிக்க முதியவர்கள் அவர்கள் முன்பின் தெரியாது. நான் ஒரு இந்தியன்; அவர் ஒரு ஆங்கிலேயர்; நான் அங்கேதான் எங்கோ தங்கியிருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். எதிரே வரும்போதே ‘good morning’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். நானும் உடனுக்குடன் ‘good morning’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு மேலே போவேன். புன்முறுவலால் ஒருவரை ஒருவர் மகிழ்விக்கும் அன்பு முறையைக் கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். அதற்கு மேல் எந்தப் பேச்சும் தொடராது .

மற்றொன்று நாம் பேசும்போது இரைச்சல் போட்டுப் பேசிப் பழகிவிடுகிறோம். அதை அவர்கள் விரும்புவதில்லை. இங்கே கணவனும் மனைவியும் நேருக்கு நேர் அடித்துக்கொள்ளாத குறை; அதற்கு மாறாக உசந்த குரலில் மற்றவர் பேசமுடியாதபடி அடக்க முயல்கிறோம்.