இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேன்பிறந்த செந்தமிழும், தமிழின் ஊற்றாம்
செழுங்கலையும், பல்வளனும் செறிந்த இந்த
நான்பிறந்த பொன்னாடும் வாழ வேண்டும்!
நற்றமிழர் பிறராளச் சீற வேண்டும்!
வான்பிறந்த வெண்ணிலவு பொய்கை ஆடி
மலைபிறந்து வருகின்ற தென்றல் போல
ஊன்பிறந்த என்னுயிரைத் தமிழை என்றும்
உதவுகின்ற உரமுண்டே! அதுவே போதும்!
4
50