| 12 இராமர் செய்த கோயில் பணிவுடன் இராமனது வார்த்தைகளைக் கைகட்டி வாய்புதைத்துக் கேட்பது போன்ற அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துகள் து. இந்த சிலைகளின் படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. o, or :, :, o - - - இந்த ஆலயத்தின் நுழைவாயிலின் எதிரே அமைந்துள்ள அழகிய பயணிகள் மண்டபம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பரீ ஏகாந்த இராமனைப் பற்றிச் சிறந்த இராம பக்தரும் சிறந்த இசைமேதையுமாகிய பூரீ தியாக ராஜ சுவாமிகள் தெலுங்கில் இரண்டு கிர்த்தனைகள் பாடியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்தினாலோ இராமேஸ்வரம் திவில் பல திருப்பணிகளை மேற்கொண்டு இருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது பார்வையின்றும் இந்தக் கோயில் தப்பியது வரியப்பாக உள்ளது. 5) தங்கச்சிமடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி (கி.பி.1713 - 1725) மிகச் சிறந்த சிவனடியாராக விளங்கியதால் மண்டபம் தோணித்துறை சத்திரத்திற்கு வந்து சேரும் சேது யாத்திரைப் பயணிகள் பாம்பன் கால்வாயைக் கடந்து இராமேஸ்வரம் வரை சென்று திரும்புவதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார். தமது இருபெண்
பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/55/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.pdf/page165-1024px-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.pdf.jpg)