பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஈரோடு மாவட்ட வரலாறு


4) மேல்கரை அரைய நாடு

- ஈரோடு வட்டம்

5) ஓடுவங்க நாடு

-சத்தியமங்கலம் வட்டம்

6) வடகரை நாடு

- பவானி வட்டம்

7) காஞ்சிக்கோயில் நாடு

- கோபி வட்டம்

8) குறுப்பு நாடு

- பெருந்துறை வட்டம்

தென்கரை நாட்டுப்பகுதி கல்வெட்டுக்களில் நரையனூர் நாடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. காங்கய நாட்டில் காரையூர்ப்பகுதி நற்காவிரி நாடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிக்கோயில் நாட்டுக்கும் மேல்கரைப் பூந்துறை நாட்டுக்கும் இடைப்பட்ட சில பகுதிகள் காஞ்சித்துண்டம் எனப்பட்டது. குறுப்பு நாட்டின் தென்பகுதி தென்குறுப்பு நாடு என்றும், வீரசோழபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. குறுப்பு நாட்டின் தென்பகுதியிலும் பொங்கலூர்க்கா நாட்டின் வடபகுதியிலும் சில ஊர்கள் இரண்டு நாடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளன.

இந்நாட்டுப் பிரிவுகள் கி.பி.9ஆம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் வந்தன. பிற்காலத்தில் மக்கள் புதிய குடியேற்றத்தால் நாடுகள் பெருகி கொங்குநாடு 42 நாடுகள் ஆயின. அவை தாராபுரம் குழ்ந்த நாடுகள் 24; குன்றத்தூர்த் துர்க்கம் சூழ்ந்த தாடுகள் 12; டணாயக்கன் கோட்டை சூழ்ந்த நாடுகள் 6 என்பனவாம் (குன்றத்தூர் - சங்ககிரி}.