142
யிலிருந்து, நிலா உலகிற்குச் (சந்திர மண்டலத்துக்குச்) செல்வதற்குரிய முயற்சி உட்பட, பல ஆக்கவேலை முயற் சிகளை முன்கூட்டிப் பாரதியார் தம் பாடல்களில் பட்டி யல் படுத்தியுள்ளார்; பட்டியல் வருமாறு:
'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்; பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’.
“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'.
‘வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு
வருவோம்’.
'முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே, நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே'.
"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்; சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்”