143
“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்; ராச புத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்”
“பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்; கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்”
'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஒயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம்;
உண்மை சொல்வோம், வண்மைகள் செய்வோம்’
'குடைகள் செய்வோம், உழுபடைகள் செய்வோம்; கோணிகள் செய்வோம், இரும் பாணிகள் செய்வோம்; நடையும் பறப்பு முணர் வண்டிகள் செய்வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்’
'மந்திரம் கற்போம், வினைத் தந்திரம் கற்போம்;
வானை யளப்போம், கடல்மீனை யளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”
'காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலை வளர்ப்போம், கொல்லர் உலை,வளர்ப்போம்
ஒவியம் செய்வோம், நல்ல ஊசிகள் செய்வோம்;
உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய் வோம்'