39
கருத்தாகும். இஃதும் இயற்கைக் கட்டுப்பாட்டு முறை யைச் சேர்ந்ததாயினும், காலம் பார்த்துச் செயல்பட வேண்டியிருத்தலின், ஒரு வகைச் செயற்கைக் கட்டுப் பாட்டு முறைபோல் எண்ணத் தோன்றுகிறது.
2) அடுத்த கட்டுப்பாட்டு முறை கணவனது கவன (poop” (Husband Careful Method) agsh. all-sypal கொண்டிருக்கும்போது, கணவனது விந்து (Semen = ஆண் கரு) வெளிப்படும் நேரத்தில், அவன் தன் ஆண் குறி உறுப் பைப் பெண் குறி உறுப்பிலிருந்து உடனே எடுத்துவிட வேண்டும். இதனால், ஆண் கரு பெண் கருவோடு சேர்ந்து குழந்தை உருவாக வாய்ப்பில்லாமல் போகிறது. காம எழுச்சியினால்-உணர்ச்சி வயப்பட்டு மயங்கி விடாமல் கணவன் கவனமாக உடனே இதைச் செய்ய வேண்டு மாதலின், இது கணவனது கவன முறை எனப்படும். @#5 Galafium #65th (pamp (Withdrawal Method), உணர்ச்சியின் உயர் எல்லைக் கட்டத்தில் உள்ள ஒரு சில ரால் முடியாதுதான்! முடிந்தால் நல்லதே! இந்த முறை எளியது; செலவு இல்லாதது; துன்பம் தராதது; தொன்று தொட்டுப் பல நாடுகளிலும் பலராலும் பின்பற்றப்படுவது. பிள்ளை வேண்டாதவர், ஆண் கரு பெண் உறுப்புக்குள் சிந்த விடாதபடிக் கவனமாக இம் முறையைப் பின்பற்றிப் பயன் காணலாம்.
3) அடுத்த முறை: கருத்தடை நுரை மாத்திரை யைப் பயன் படுத்தலாகும். இத்தகைய மாத்திரை ஒன் றைப் புணர்ச்சிக்கு முன் பெண் உறுப்புக்குள் செலுத்த வேண்டும்; பின்பு புணர்ந்தால், பெண் உறுப்பிலிருந்து கசி யும் நீரில் இந்த மாத்திரை கரைந்து ஆண் கரு அணு பெண் கரு முட்டையுடன் சேராதவாறு தடுத்து விடும்.