பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 நீர் செல்வதற்கு, இப் பல்கலைக் கழக நெறிப்படி உமக்கு வழிச்செலவுப்படி தரப்படும். அக்குழுவில் உம் உறுப்பாண்மையை இயன்ற விரைவில் ஏற்றுதவுமாறு வேண்டிக் கொள்கின்றேன்”. இங்ஙனம் என் இசைவை வேண்டுவது போல் எழுதப் பட்டிருந்ததேனும், எல்லாத் திட்டங்களும் அமைப்புக்களும் என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை யென்றும், அவற்றிற்கெல்லாம் வினை முதல்கள் அ.ம.ப. கக. மொழி நூல் துறையை அரக்கர்போல் ஆட்டிவைக் கும் இரு தமிழ்ப்பேராசிரியரென்றும், உணர்ந்துகொண் டேன், ஆதலால், அ.ம.ப.க.க வில் பணியாற்ற வேண் டின், ஆரியத் தலைமையை யேற்றுத் தமிழைக் காட்டிக் கொடுத்தல் தவிர மற்றெல்லா நிலைப்பாடுகட்கும் இணங்கியே ஆகல் வேண்டும் என்னும் முடிவிற்கு வந்துவிட்டேன். குழுவறுப்பினர் பன்னிருவருட் பெரும் பாலார் ஆரியச் சார்பாயிருத்தலின், பர், அரசமாணிக்க னாரையும் பர். மு.வ வையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு துணைக் கண்காணகரை வேண்டினேன். அவர்களும் இசைந்தார்கள். ஆயினும் நான் எதிர்பார்த் தவாறு என் கை வலியறவில்லை. ஆரியம் அத்துணை ஓங்கியிருந்தது. புதிதாய் இருவர் சேர்க்கப் பெற்றதி னாலோ. பிறிதொரு கரணியத்தாலோ, பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட குழுவில் திரு. கொரடா இராமகிருட் டிண ஐயாவும் திரு. நாராயண மேனனும் இடம் பெற வில்லை. சென்னை மண்டலக் கல்லூரிச் சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தனார் (எம். ஏ.) ஒரு புத்துறுப் பினராயினர். கமொழிநூல் துறையின் முதற்பணி தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பென்று விளம்பரஞ்