பக்கம்:எழில் விருத்தம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

43

ஒன்னார் படையினை வென்றே
    ஒள்முர சார்த்திடல் ஒப்ப
முன்னர் எழும்பியே தாவி
    முன்னுள சேவலின் உச்சி
தன்னைப் பலமுறை முள்ளால்
    தாக்கிடும் ; வென்றுபின் கூவும்!
தன்முன் புறமுது கிட்ட
    சேவலைத் தாக்குமோ சேவல்?............................. 6

கொண்டை நிமிர்த்தொலி யார்க்கும்
    கோழியின் சண்டையைக் கண்டோ
முண்டி எழுந்தெதிர் வந்தே
    மூண்டிடும் நீள்பகை சீறிப்
பண்டைத் தமிழ்நில மக்கள்
    பகையடி பிற்பட மீண்டும்
சண்டை இடுபவர் மீதே
    தம்படை ஏவுதல் இல்லை?................................... 7

மாட்டுத் தொழுவரு குள்ள
    மண்ணிடைக் குஞ்சுகள் மேயக்
கூட்டி ஒதுக்கிய குப்பைக்
    குப்பலில் பெட்டையும் ஏங்கும்;
வீட்டு நெடுவளைக் கூரை
    மேலிருந் தேநடை காட்டி
வாட்டம் விலக்கிடு காதல்
    மணிக்குரல் காட்டுமே சேவல்!............................. 8