பக்கம்:கனிச்சாறு 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


162

நேர்மையராய் நெறிவாழ்வீரே !


தமிழ்நாட்டிற் பிறந்தெழுந்து, தமிழ்நாட்டுச்
சோறுண்டு, நீரும் உண்டு,
தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி கற்றுயர்ந்து,
பணிபெற்று, வாழு கின்ற
தமிழ்நாட்டுப் பார்ப்பனரே! தமிழ்மொழியைத்
தமிழினத்தைத் தாழ்த்து கின்றீர்!
தமிழ்நாட்டைத் தில்லியர்க்கே தலைதாழ்த்தச்
செய்கின்றீர்! நன்றி கெட்டீர்!

சாதிமதம் பார்க்கின்றீர்! தமிழினத்தை
இழிக்கின்றீர்; சழக்குச் செய்வீர்!
ஆதியிலே நும்மவர்கள் அளந்துவைத்த
வேதங்கள், புளுகு நூல்கள்
ஓதியவா றின்னும் ஏ மாற்றுகின்றீர்!
கடவுள்கரு வறையுள் வாழும்
வேதியராய்ப் - புரோகிதராய் - விளங்குகின்றீர்;
பிறர்நலன்கள் விழுங்கு கின்றீர்!

நடுநிலையாய் - நேர்மையனாய் - ஞாயமொன்று
சொல்லுகின்றேன்; நயந்து கேட்பீர்!
பாடுபடும் மக்களெல்லாம் பார்ப்பனர்க்கே
அடிமையெனும் பழிமை நீக்கிக்
கேடுகெட்ட சாதிவுணர் வழித்துவிட்டு,
மடமைசெயும் மதநோய் நீங்கி,
நீடுபுகழ்த் தமிழோடும் தமிழரோடும்
நேர்மையராய் நெறிவாழ் வீரே!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/272&oldid=1437483" இலிருந்து மீள்விக்கப்பட்டது