பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

மந்திரத்தால் கட்டுண்ட மாநா கம்போல்,
மறுமொழியொன் றுரைக்காமல் நின்றேன்; மாறாய்ச்
“சுந்தரமென் றொருகவிஞ ரிங்குள் ளாரா?
சொல்லுங்க ளவரிருந்தால், சுருக்காய்ப் பார்க்க
வந்தேன்நான் நெடுந்தொலைவி லிருந்திங் கென்றே
'வனப்புடனே கைகுவித்தான்; 'வருக' வென்றேன்
இந்தமனி தன்வரவால் மோர்க்கா ரிக்கும்
எதுவும்சொல் லாதுதுளி யிருந்தே னெண்ணி.

வாலிபனென் பதுமட்டு மன்று; சால
வளர்ச்சியொடு பேரழகன்; வருத்த மற்றோன்!
மேலுமுப சரிப்புக்குக் கொஞ்சம் பேசி
மெதுவாக “வந்ததுநீ யெதற்கா” யென்றேன்.
“வேலுமயி லென்றழைப்பா ரென்னை! மேற்கே
விநயபுரம் மிட்டாதா ரெனது தந்தை!
நாலேநா ளுள்ளதினி யென்கல் யாணம்!
நானும்மை யழைத்தேக வந்தே” னென்றாள்.

கனவொன்று காண்பதெனக் கடுகி நானும்
கண்துடைத்துக் கொண்டவனைக் கனிந்துபார்த்தேன்
மனைவிகத வருகினிலே மறைந்து நின்று
மகிழ்வதனை யறிந்து கனவன்றென் றோர்ந்தேன்.
எனதுமனம் வாலிபனைப் பற்றி யன்றங்
கெதையெதையோ இசைவுபட எண்ணும் போது,
தனது திரு மணவழைப்புத் தாளொன்றொடு,
தாராள மாய்ப்பணமும் வைத்துத் தந்தான்.

113