இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“எந்தப் பையனுக்குத்தான் ஆசையிருக்காது?” என்றான் மோஹன்,
“சரி, இப்படி வா,” என்று மோஹனைப் பிடித்து முனுசாமி, அப்படியே துரக்கி, ஒரு குதிரைமேல் உட்கார வைத்தான். “ஹை” என்று குதிரையைத் தட்டினான் அது நடக்க ஆரம்பித்தது.
“என்ன தம்பி, எப்படி இருக்குது சவாரி?” என்று கேட்டுக்கொண்டே முனுசாமி இன்னொரு குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.
“குஷியாயிருக்குது” என்று பல்லைக் காட்டியபடி பதில் சொன்னான் மோஹன்.