பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சனிக்கிழமைதோறும் மகாசந்நிதானம் அவர்கள் மிளகுக் காப்புச் செய்து. கொள்வார்கள். அன்று மகாசந்நிதானம் அவர்கள் 'சித்திரக்கட்டு' என்னும் இடத்தில் இருப்பார்கள்! அந்த நாளில் ரெங்கநாதன் அலுவலகத்துக்குச் செல்லும் போது, இடையில் இருந்த மகாசந்நிதானம் அவர்களை வணங்கி வாழ்த்துப் பெற்றான். விசிறிக்கொண்டு நின்றான்.

மகாசந்நிதானம் அவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள், பலரையும் சிரிக்கச் செய்வார்கள். அவர்கள் சிரிக்க மாட்டார்கள். அன்று ஒரு வேடிக்கை! அப்போது 'பண்டாரக்கட்டு' என்னும் பகுதியில் சுப்பையா முதலியார் என்பவர் வேலை செய்தார். நல்லவர், மாடு போல உழைப்பார்! புத்தியை அதிகமாக உபயோகப் படுத்தமாட்டார்! சொன்னபடி செய்வார்.

மகாசந்நிதானம் அவர்கள் பண்டாரக்கட்டு சுப்பையாவை அழைத்து, "பரிகலம் (சமையற்கட்டு) அம்மியில் பல் குத்தப் பயன்படும் ஊசி குத்தி வைத்திருக்கிறது, எடுத்து வா!” என்றார்கள். சுப்பையா ஓடினார். அம்மியைத் தடவிப் பார்த்தார். ஊசி இல்லை. வந்து "ஊசி இல்லை!” என்றார்.

அம்மியில் ஊசி குத்தி வைக்க முடியுமா? இந்தப் பகுத்தறிவு அவருக்கு இல்லை என்று நினைக்காதீர்கள்! மடத்தில் பழக்கம் அல்லது பழக்கப்படுத்துவது. மகாசந்நிதானம் என்ன உத்தரவு செய்தாலும் அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும்! செய்யவேண்டும்... இந்தப் பழக்கத்தால் வந்த விளைவு இது!

அப்போது எதிர்பாராத சூழ்நிலையில் மகாசந்நிதானம் ' அவர்கள் ரெங்கநாதனிடம் “பழுக்கலாமா?" என்று கேட்டார்கள்! ரெங்கநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.