பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


டாக்டர் ஷெனாய் அலுமினியத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகிறது. இதை இன்னும் விரிவாக்கி வீடுகளுக்குத் தேவையான பொருட்களும், பஸ்ஸில் போகும்போது நாம் பிடித்துக் கொள்கிறோமே, அந்தக் 'கிளாம்ப் எல்லாம் செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இத்தனை சிறிய கிராமத்தில் இவ்வளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது என்பது மிகவும் பெருமையளிக்கிறது.

அம்மாவிடம் நான் சொன்ன பொய்

ன் பதினேழாவது வயதிலேயே எனக்கு ஆன்மீக ஆர்வம் தொடங்கிவிட்டது. பிற்பாடு தருமபுரத்தில் அவர்களுக்கே ஒருவர் தேவையாய் இருந்து என்னைக் கேட்டார்கள். துறவுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு வருவதாய்ச் சொல்லிவிட்டு ஊருக்கு வந்தேன். வீட்டில் பயங்கர எதிர்ப்பு. என் தாயார் பயந்து விட்டார். "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்டா ரங்கநாதா, (அதுதான் என் பெயர்) நீ வேலை பார்த்துக் கிழிச்சது போதும். இங்கேயே இருந்து காடு கழனியையெல்லாம் பாத்துக்கோ" என்றார். நான் சும்மா தலையாட்டி விடவில்லை. "நான் வேலை பார்க்கும் இடத்தில் மேலிடத்துக்குச் சொல்லாமல் வந்தால் அது தப்பு. நான் ஒரு நடை போய்ச் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்," என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நான் துறவறம் மேற்கொண்ட பிறகு என் மனதில் சஞ்சலங்கள் வந்ததே கிடையாது.