பக்கம்:குறட்செல்வம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

‘இசையிலா யாக்கை’ என்ற குறிப்பின் மூலம் உணர்த்துகிறார்.

உயிருள்ள மனிதனால் நிலத்திற்குப் பயனுண்டு. உயிரற்ற பிணத்தைத் தாங்குதலால், நிலத்திற்குப் பயனில்லை என்பதைக் குறிக்க, 'பொறுத்த நிலம்’ என்று குதிப்பிட்டார். ஆக, மனிதர்கள் நல்வாழ்க்கையின் மூலம் தான் நிலத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைய முடியும், இக் கருத்தினை,

வகையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

என்ற குறட்பாவின் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/98&oldid=1562419" இலிருந்து மீள்விக்கப்பட்டது