பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

யாலும் கேள்வியாலும் பெறும் அறிவையுங் கொண்டு குழந்தையை வளர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்குமல்லவா?

குழந்தையின் உடல் நலம் செம்மையாக இருப்பதற்குக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. இயற்கை உபாதைகளேத் தவிர்ப்பதிலும், நல்ல பழக்கங்களை அநுசரிக்கச் செய்வதிலும், ஏற்ற உணவை அளிப்பதிலும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன. இவ்வாறே குழந்தையின் உள்ள வளர்ச்சியிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன. இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதால் இயல்பாகவே குழந்தையை வளர்ப்பதற்குள்ள உணர்ச்சி இன்னும் நன்கு விரிவடையும். அதனால் பெற்றோர்கள் குழந்தையை மேலும் சிறந்த முறையில் வளர்க்கலாம்.

சில சமயங்களிலே குழந்தை பிடிவாதம் பண்ணுகிறது; ஓயாது அழுது தரையிலே விழுந்து புரளுகிறது; பொய் சொல்லுகிறது. இப்படி நாம் விரும்பாத ஏதாவதொன்றைச் செய்கிறது. தாய்க்குப் பெரிய சோதனையாக அது முடிகிறது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரிகிறதில்லை. வீட்டில் அநுபவம் வாய்ந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குழந்தையைத் திருத்த ஏதாவது உபாயம் கூறுவார்கள். பாட்டியம்மாள் இருந்தால் அவளுடைய யோசனை நிச்சயம் கிடைக்கும். குழந்தையின் உள்ளப் போக்கை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் தங்களுடைய யோசனைகளையும் கூறியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க ஆசைப்படும் தாயும் தந்தையும் அறிந்திருக்க வேண்டும்.

“ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே” என்று தமிழ்த் தாய் ஒருத்தி தனது தலைமையான கடமையைப் பற்றிக் கூறியிருக்கிறாள். குழந்தையைப் பெறுவது மட்டும்