பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சாயங்கால மேகங்கள்

ல்லாமே எற்பாடு செய்திருந்தபடி நடந்தன. நாகேஸ் வரராவ் பூங்காவில் அந்தப் பெண் காமாட்சியை ரெளடியும் கல்லூரி மாணவனுமான குமரகுரு சந்தித்தபொழுது இருட்டிக் கொண்டு வந்தது. குமரகுரு தாங்கிக்கொள்ள முடியாத உற்சாகத்தோடு இருந்தான். ஒதுங்கி ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த காமாட்சியே வெறுப்பு மாறித் தன்னை வலிய அழைத்திருந்த பெருமையில் திளைத்து அவளிடம் காதல்கனி மொழிகளைப் பறிமாறத் தொடங்கியிருந்தான் குமரகுரு. நன்றாகவே உளறத் தொடங்கியிருந்தான்.

ஆனால் உள்ளுறப் பயத்தோடும் பதற்றத்தோடும் அரு வருப்போடும் அவனருகே அமர்ந்திருந்தாள் அந்த இளம் பெண். மனத்திற்கு விருப்பமில்லாததை மேலுக்காக நடிப்பது சிரமமாயிருந்தது அவளுக்கு.

கயமை நிறைந்த விடலையும் காமுகனும், வசதியுள்ள குடும்பத்துப் பொறுக்கியுமான குமரகுருவோ தன் குலாவல் பேச்சின் மூலம் அவளிடம் எல்லை மீறி விரசத்துக்குப் போய்க் கொண்டிருந்தான்.

“கண்ணே! எந்த ஹோட்டலில் ரூம் புக் பண்ணலாம்? மெட்ராஸா? பெங்களூரா? என் உள்ளம் இப்பவே இன்பக் கனவுகளிலே திளைக்கிறது” என்று கூறிக் கொண்டே அவளைத் தோளிலும் இடுப்பிலும் தொட முயன்றான் அந்த விடலை. அவன் இஞ்சி தின்ற குரங்குபோல் பரபரப்பாயிருந்தான்.

அவ்வளவில் அவள் நெளிந்து வளைந்து விலகி அவன் தன்னைத் தீண்டவிடாமல் பாதுகாத்துக் கொண்டாள். முள் மேல் அமர்ந்திருப்பது போல் சிரமாயிருந்தது அவளுக்கு. பார்க்கில் கூட்டம் குறைந்து கொஞ்சம் அமைதி சூழட்டும் என்று பொறுத்திருந்தனர் மறைவில் இருந்த பூமி குழுவினர்.

தாங்கள் குமரகுருவுக்குப் பாடம் கற்பிப்பதற்கு முன்னர் காமாட்சியை எப்படியாவது அவனிடம் இருந்து