மு. கருணாநிதி முதலமைச்சர் தலைமைச் செயலகம் சென்னை - 600 009 அணிந்துரை மகிழ்ச்சிகரமான நாட்களில் மட்டுமல்லாமல், துன்ப காலங்களிலும் எனக்குத் துணையாகித் தோளுக்கு வலிமை சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள தூய நண்பர் திரு. சாவி அவர்களின் 85வது பிறந்த நாளையொட்டி அன்புக்குரிய திரு. ராணிமைந்தன் அவர்கள் சாவி - 85 எனும் பெயரில் அருமையான நூலொன்றை உருவாக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 'உழைப்பு, நேர்மை, துணிவு - இந்த மூலதனம் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பதுதான் சாவியின் வாழ்க்கை” - என்று இந்நூலின் ஆசிரியர் திரு. ராணிமைந்தன் இதன் முகப்புரையில் கூறுவது முற்றிலும் பொருந்தும். திரு. சாவி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை ஒர் ஆவணமாகத் தொகுக்க வேண்டும் என ஆசை கொண்டு, ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகத் திரு. சாவி அவர்களுடன் பழகிக் களித்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த அருமையான நூலைப் படைத்துள்ளார் திரு. ராணிமைந்தன். நீதிக்கட்சி தோன்றிய 1916ஆம் ஆண்டில் பிறந்த திரு. சாவி, அதன் தாக்கமாகச் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இதயத்தில் தாங்கியுள்ளவர்; அதனை எழுத்தில் வடித்து வளர்த்தும், வாழ்வில் கடைப்பிடித்தும் பாராட்டுகள் பெற்றுள்ள பெருமைக்குரியவர். தந்தை பெரியார் அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டுள்ளவர் திரு. சாவி, அவர் தந்தை பெரியார் மீது தாம் ஈர்க்கப்பட்ட விதத்தை
பக்கம்:சாவி-85.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை