பக்கம்:தமிழர் மதம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் திருமால் மதமும் ஒரு தனி மதமாகத் தொன்றுதொட்டு இருந்து வந்திருப்பினும், சிவனுக்கே இறைவன் என்னும் பெய ருண்மையும், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்'> என்னும் சிலப்பதிகாரக் கூற்றும் (ரு : ககூகூ), சிவ மதத்தின் தலைமையை யுணர்த்தும். உலக மெல்லாம் உடையவர் என்பது பற்றி, சிவனுக்குப் பெருவுடையார் என்றும் பெயர். ('ஏழுடை யான் பொழில் (திருக்கோ.எ). (உ) திருமால் மதம் திருமால் நிறமும் பெயரும் ada எல்லாம் வல்ல இறைவனையே, முல்லை நிலத் தெய்வ அடிப் படையில் நீரின் கூறாகக் கொண்டு, நீரைப் பொழியும் முகில் நிறம் பற்றி மாயோன் (மாயன், மாயவன்) என்றும், மாலோன் (மால், மாலன், மாலவன்) என்றும், கார் வண்ணன் (கரியன், கரியவன்) என்றும், முகில் கூடும் வானிறம் பற்றி நீல வண்ணன் (மணி வண்ணன், கடல் வண்ணன்) என்றும், பெயரிட்டு வழி பட்டு வந்துள்ளனர் ஒருசார் தமிழர். மால் என்னும் பெயர் அடையடுத்துத் திருமால், பெருமால் என வழங்கும். பெருமால்- பெருமாள். முகிலுக்கும் அது நிற்கும் வானிற்கும் விண் என்னும் பெய ருண்மையால், அப் பெயரை அடியாகக் கொண்ட விண்டு என் னும் பெயரும் திருமாலுக்கு ஏற்பட்டது. விள்ளுதல் - விரிதல், திறத்தல், வெளி யாதல். விள் - விண் = வெளி, வானம், முகில், மேலுலகம். விண் - விண்டு - வெளி, வானம், முகில், திருமால், மேலுலகம். பச்சை நிறம் நீலநிறத்திற்கு இனமாதலால், பச்சையன், பச்சையப்பன் என்னும் பெயர்களும் திருமாலிற்குத் தோன்றின. திருமா விருக்கை விண்டு + நகர் = விண்ணகர்- க. திருமால் கோவில், திருமால் வீட்டுலகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/65&oldid=1428924" இலிருந்து மீள்விக்கப்பட்டது