பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தமிழ்ப் பழமொழிகள்


கொடுக்க மாட்டாத இடையன் சினையாட்டைக் காண்பித்தாற் போல.

கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்; இடமாட்டாதவன், எச்சில் என்று சொன்னான். 9675

கொடுக்கிற கைக்கு என்றும் குறைவு இருக்காது.

கொடுக்கிற சாமி என்றால் குண்டியைக் கிழித்துக்கொண்டு கொடுக்கும்.

கொடுக்கிறது உழக்குப் பால்; உதைக்கிறது பல்லுப் போக.

கொடுக்கிறதும் கொடுத்துக் குஷ்ட ரோகி காலில் விழுகிறதா?

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டு வந்து கொடுக்கும். 9680

(பிய்த்துக் கொண்டு. கிளப்பிக் கொடுக்கும்.)


கொடுக்கிற தெய்வம் மூஞ்சியிலே அடித்துக் கொடுக்கும்.

(முகத்திலே அறைந்து.)

கொடுக்கிற தெய்வம் ஆனால் கூரையைப் பிரித்துப் போட்டுக் கொடுக்காதோ?

கொடுக்கிறவன் எப்போதும் கொடுப்பான்.

கொடுக்கிறவன் கை என்றும் மேல்தான்; வாங்குகிறவன் கை என்றும் கீழ்தான்.

கொடுக்கிறவன் வாழைத் தாறாகிலும் கொடுப்பான். 9685


கொடுக்கிறதைக் கொடுத்தால் குடம் கொண்டு தண்ணீருக்குப் போவாள்.

கொடுக்கிறதையும் கொடுத்துக் குருட்டுத் தேவடியாளிடம் போனானாம்.

கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகியின் காலில் விழுவானேன்?

கொடுக்கிறவன் கன்னத்தில் அடித்துக் கொடுப்பான்.

கொடுக்கிறவன் கை என்றும் மேலேதான்; வாங்குகிறவன் கை என்றும் கீழேதான். 9690


கொடுக்கிறவனைக் கண்டால் பேய் குளைத்துக் குளைத்து ஆடும்.

(குழைந்து குழைந்து.)

கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.