54
தமிழ்ப் பழமொழிகள்
கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே!
கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை.
- (விளைச்சல்.)
கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.
கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா?
கதை அளக்கிறான். 6875
கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை.
கதைக்குக் கால் இல்லை; கண்ட புருஷனுக்கு முறை இல்லை.
கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை.
கதைக்குக் கால் இல்லை, பேய்க்குப் பாதம் இல்லை.
- (பிட்டம் இல்லை.)
கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை. 6880
கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை.
கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம்.
கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி.
கதை பண்ணுகிறான்.
கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது. 6885
கதையை நிறுத்திக் காரியத்தைப் பேசு.
கதையோ பிராமணா, கந்தையோ பொத்துகிறாய்? அல்லடி பேய் முண்டை, சீலைப்பேன் குத்துகிறேன்.
கந்தப்பூர் சிற்றப்பா நமஸ்காரம்; பாதி பொச்சை மூடிக்கொண்டு பாக்கியசாலியாய் இரு.
கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியுமா?
கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை. 6890
கந்த புராணம், நம் சொந்தப் புராணம்.
கந்தர் அந்தாதியைப் பாராதே; கழுக்குன்ற மாலையை நினையாதே.
- (கழுக்குன்றம் மலை வழி போகாதே, தொடாதே.)
கந்தலில் கால் இட்டது போல.