தமிழ்ப் பழமொழிகள்
59
கர்த்தாவைக் குருடன் வேண்டுவது கண் பெறத்தானே?
கர்ப்பத்துக்குச் சுகம் உண்டானால் சிசுவுக்குச் சுகம்.
கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம்.
கர்ப்பூர மலையில் ஆக்நேயாஸ்திரம் பிரயோகித்தது போல.
கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும். 6985
- (தொலைக்க.)
கர்மம் முந்தியா? ஜன்மம் முந்தியா?
கர்விக்கு மானம் இல்லை; கோபிக்குப் பாபம் இல்லை.
கரகத்துத் தண்ணீர் காத வழி.
கரகத்து நீர் காதம் காக்கும்.
- (கரகத்துக்கு நீர் காகம் காக்கும்.)
கரட்டுக் காட்டுக்கு முரட்டு மண் வெட்டி, 6990
கரடிக்கு உடம்பெல்லாம் மயிர்.
கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல.
கரடிக்குப் பிடித்த இடம் எல்லாம் மயிர்.
கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனைக் கண்டாலும் பயம்.
- (உதை பட்டவனுக்கு.)
கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக இடம் இராது. 6995
- (வழி இராது, இருக்குமா?)
கரடி பிறையைக் கண்டது போல.
கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை.
கரண்டி ஆபீஸ்காரனுக்குக் காதிலே கடுக்கன் என்ன?
கரண்டி பிடித்த கையும் கன்னக்கோல் பிடித்த கையும் சும்மா இருக்குமா?
கரணம் தப்பினால் மரணம். 7000
- (கரணம்.திருமணம்.)
கரதலாமலகம் போல் காண்கிறது.
கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது.
கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது.
கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது.
கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடையாது. 7005