பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/463

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

447


அவன் தனது திட்டத்தைக் கைகளை ஆட்டி சைகைகள் காட்டி விளக்கியதால், அவன் கூறிய விஷயங்கள் எல்லாம் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் எளிதாகவும் தோன்றின. நிகலாயை அவள் எப்போதும் ஓர் அசமந்தப் பேர்வழியாகவே கருதி வந்திருக்கிறாள். முன்னெல்லாம் அவன் எந்த விஷயத்தையும் பகையுணர்ச்சியோடும் அவநம்பிக்கையோடும்தான் பார்ப்பான். இப்போதோ அவன் புனர்ஜன்மம் எடுத்த மாதிரி முற்றிலும் மாறிப்போய்விட்டான். அவனிடம் காணப்பட்ட நிதானமும் அன்பும் தாயின் இதயத்தைக் கவர்ந்தது; பரவசப்படுத்தியது;

“கொஞ்சம் யோசித்துப் பார். அவர்கள் இதைப் பகல் நேரத்திலேயே செய்யலாம். பகலில்தான் செய்ய முடியும்! சிறைச்சாலையிலுள்ளவர்கள் அனைவருமே விழித்திருந்து நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில். ஒரு கைதி தப்பியோடிவிடுவான் என்று எவரேனும் சந்தேகப்பட முடியுமா?”

“அவர்கள் சுட்டுத்தள்ளமாட்டார்களா?” என்று நடுங்கிக்கொண்டே கேட்டாள் தாய்.

“யார்? சிப்பாய்கள் இல்லை. அந்தக் காவலாளிகளுக்கு எல்லாம் தங்கள் கைத்துப்பாக்கிகளை வைத்து ஆணி அறைந்துதான் பழக்கம்.”

“நீ சொல்வதைப் பார்த்தால் எல்லாம் எளிதாகத்தான் தோன்றுகிறது.”

“நீயே பாரேன். நீ அவர்களிடம் இது விஷயமாகப் பேசிப் பார். நான் எல்லாம் தயாராய் வைத்திருக்கிறேன். நூலேணி, சுவரில் அறைய வேண்டிய கொக்கி - எல்லாம் தயார். இங்கே என் வீட்டுக்காரன் இருக்கிறானே, அவன்தான் விளக்கேற்றுகிற நபராக இருப்பான்”

கதவுக்கு அந்தப் புறத்தில் யாரோ இருமிக்கொண்டே தடவித் தடவி நடந்தார்கள். ஏதோ ஒரு தகரத்தை உருட்டி ஓசை உண்டாக்கும் சத்தம் கேட்டது.

“அதோ, அது அவன்தான்” என்றான் நிகலாய்.

வாசல் நடையில் ஒரு தகர குளியல் தகரத் தொட்டி முதலில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஒரு கரகரத்த குரல் ஒலித்தது:

“ஏ, பிசாசே! உள்ளே போய்த் தொலையேன்!”

அந்தத் தகரத் தொட்டிக்கு மேலாக ஒரு மனிதனின் முகம் தெரிந்தது. சுமூக பாவமும், துருத்திய கண்களும், நரைத்த தலையும் மீசையுமாகக் காட்சி அளித்தான் அவன்.

நிகலாய் அந்தத் தொட்டியை உள்ளே இழுத்து அவனுக்கு உதவி செய்தான். தொட்டி, உள்ளே வந்த பிறகு, நெட்டையான கூனிப்போன