—15—
மனிதரில் தீட்டுமுண்டோ? மண்ணிற் சிலர்க்கிழைக்கும்
அநிதத்தை என் சொல்வதோ? -- சகியே அநிதத்தை
97
"புனிதர்என் றேபிறத்தல்" "புல்லர்என் றேபிறத்தல்"
எனுமிஃது விந்தையடி - சகியே எனுமிஃது விந்தை
98
ஊரிற் புகாதமக்கள் உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நா
99
நேரிற் பார்க்கத்தகாதோர் நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நாமேயடி
100
மலம்போக்கும் குளம்மூழ்கா வகைமக்களை நசுக்கும்
குலமாக்கள் நாமேயடி - சகியே குலமாக்கள் நாமே
101
மலம்பட்ட இடம் தீட்டாம் மக்கள் சிலரைத்தொட்டால்
தலைவரைக்கும் தீட்டநாம் - சகியே தலைவரைக்கும்
102
சோமனைத் தொங்கக்கட்டச் சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி - சகியே தீமக்கள் நாமேயடி
103
தாமூழ்கும் குளம் தன்னில் தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி - சகியே போமாறு தானெ
104
பாதரக்ஷை யணிந்தாற் பழித்துச் சிலரைத் தாழ்த்தும்
காதகர் நாமேயடி - சகியே காதகர் நாமேயடி
105
ஓதவசதியின்றி உலகிற் சிலரைத் தாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே சூதர்க்கு வா
106