பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—26—

ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
நாற்றிசைக்கும் ஞானப் புனல் ஊற்றிவந்தவர் - மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
மேதினியின் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்த - இவர்
இஞ்சிதின்ற குரங்கென இனித்திடுவார் - நாம் (என்று)

***



உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
ஊரை அடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
வாகனங்கள் போகப்போருள் அனுபவிக்க - மிக
முயல்பவர் தம்மிற்சிலரை - மண்ணில்
முட்டித் தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம் (என்று)