பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

திருக்குறள்



இரத்தல்-பிச்சை எடுத்தல்; காத்தல்-கொடுக்காமல் ஒளித்தல், இல்லை என்று சொல்லுதல்; பழி-பாவம், குற்றம். 1051

2.இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

பிறரிடம் சென்று ஒரு பொருளை வேண்டிக் கேட்டல் ஒருவருக்கு இன்பமே ஆகும்; ஆனால், அவ்விதம் அவர் இரந்து கேட்ட போது அந்தப் பொருள் அவருக்கு எந்த வகையான துன்பமும் இல்லாமல் எளிதில் கிடைப்பதாக இருத்தல் வேண்டும்.

துன்பம் உறாஅ வருதல்-எளிதில் கிடைத்தல். பல முறை நடக்க வைக்காமல் தருதல், அன் போடு உதவுதல், கேட்பதற்கு முன்பு குறிப்பறிந்து தருதல் 1052

3.கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்னின்று
இரப்புமோர் ஏஎர் உடைத்து.

கள்ளம் இல்லாத உள்ளமும், கடமை அறிந்து உதவும் குணமும் உடையோர் முன்னே நின்று அவரிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்டலும் ஓர் அழகுடையதே ஆகும்.

கரப்பு இலா நெஞ்சம்-கள்ளம் இல்லாத உள்ளம்; கடன்-கடமை; இரப்பு-இரந்து கேட்டல்; ஏர்-அழகு. 1053

4.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

இரந்தார்க்குத் தம்மிடம் உள்ள பொருளை மறைத்து 'இல்லை' யென்று சொல்லும் இழிகுணத்தைக் கனவிலும் அறியாதவரிடம் ஒருவன் சென்று ஒரு பொருளை வேண்டிக் கேட்பதுவும், கொடுப்பது போன்ற சிறப்புடையதே ஆகும். (அஃது இழிவே ஆகாது.)

தேற்றுதல்-தெளிந்தறிதல், நன்றாக அறிதல்; மாட்டு -இச்சொல் இடம் என்னும் பொருளில் வந்தது. 1054