பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 107



"பசியின் உண்மையையும் ரகசியத்தையும் உணர்ந்தவன்தான் நானும். இந்தா ஐந்து ரூபாய். இப்போதைக்கு இதை வைத்துக் கொள். மறுபடியும் திரும்பி வந்து உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். எங்கள் லாட்ஜில் வேலை தருகிறேன். நீ இங்கேயே, இந்தப் பெட்டிக் கடை வாசலிலேயே நில்," என்று மீண்டார்.

தவசீலி, இரண்டு கைகளாலும் ஏந்திய ரூபாய் நோட்டுக்களைக் கண்டு, மால மாலையாகக் கண்ணிர் பெருக்கினாள். துயரததில் மட்டும்தான் கண்ணிர் வருமா? ஆனந்தத்திலும்தான் வருகிறது!

"ஐயா, என் நெஞ்சில் இடம் பெற்ற தெய்வம் நீங்கள்!" என்று உணர்ச்சி வசப்பட்டு, மெய்மறந்த நிலையில், கண்ணிரும் கம்பலையுமாகச் சொன்னாள் தவசீலி.

தவசீலியின் தந்தையை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தபோது, தவசீலியிடம் அவள் விருப்பப்படி, சிறுகதை உத்திகளையும் லட்சணங்களையும் உதாரணம் காட்டி விவரித்தார்.

"என் நெஞ்சை உங்களிடம் ஒரு நாள் திறந்து காட்டினால்தான் ஸார், எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படும்; உங்களை என் ஆயுள் பூராவும் மறக்க மாட்டேன், ஸார்.ஆமாம், ஸார். உங்களை நான் என் ஆயுள் பூராவும் மறக்கவே மாட்டேன் ஸார். என்னவோ, தெய்வம்தான் இப்படிச் சொல்லும்படி கட்டளை இடுகிறது-ஆமாம், ஸார்!..."