பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் " 223 அமைதியை ஆசிரியர் தொல்காப்பியர் நிலைநாட்டப் போர் புரிதலை இலக்கியங்களில் பாராட்டலாம். இலக்கியப் பொருளாகக் கொள்ள லாம். காரணமின்றி வலிமை யொன்றே கருதிப் போரிடும் கயவர்களை இலக்கியங்களின் பொருளாகக் கொண்டு இலக்கியம் இயற்றுதல் கூடாது." என்று வழிகாட்டியுள்ளார். இங்கும் இருபதாம் நூற்றாண் டின் உயர் கொள்கையாகக் கருதப்படும் பகை தணி வினைப் போரைத் தொல்காப்பியர் கூறியுள்ளமையால் தமிழர் உயர் நாகரிகச் சிறப்பு மலை விளக்காய் இலங்குகின்றதை எண்ணி மகிழலாம். தமிழன் என்று சொல்லலாம். தலைநிமிர்ந்து நிற்கலாம். அமைதியை நிலை நாட்டும் போர் என்றும் வேண்டி யது தான். அமைதியை அழிக்கும் போர் மறைய வண்டியதுதான். போர் ஒழிக்கும் புதுமை இலக்கியம் போற்றுக. தும்பைத் திணை பன்னி ரண்டு துறைகளுடையது. பன்னிரண்டு துறை களும் பண்டைத் தமிழகப் படை மறவரின் ஆண்மை மிகு வீரத்தை அழகுற விளக்குகின்றன. அக்காலத் தில் தேர்ப்படை இல்லை போலும். "தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலவும் என்னுமிடத்தில் தேர் குறிப்பிடப்பட்டிலது. தேர் தானே இயங்காது குதிரையால் இழுக்கப்பட வேண்டியிருந்தமையான், குதிரைப் படையுள் அடக்கிவிட்டனர் எனக் கருத இடமுண்டு. அக்காலப் போர் முறையுள் வேந்தரும் படைத் தலைவரும் முன்னின்று போர் நடத்தி வெற்றி பெறுவாரே யன்றி, இக்காலம் போல் படையை முன்னிறுத்திவிட்டுத் தாம் தக்கதோர் காவலிடத்தில் வீற்றிருந்து கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்திலர். ஆதலின் போர் வெற்றி முழுவ