பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாத்துரை

3



அச்சரத்தை ஓதிவருகிறார். பல்கலைக் கழகம் உங்களுக்கு அளித்திருக்கும் இலச்சினையில் "with and Courage and Faith" என்ற வாக்கியம் பொறிக் கப்பட்டிருக்கிறது. ஆதலால் "அச்சம் தவிர்" என்று போதனை புரியும் அவினாசியார் ஆட்சியின் கீழ் தைரியத்தை (Courage) தனது ஒரு முக்கிய பண்பாக உடைய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயமறியாத பருவத்திலுள்ள நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. "பயப்படக் கூடாது." அதுதான் பல்கலைக் கழகத்தின் பண்பாக இருக்க வேண்டும். பயந்தால் பல்கலைக் கழகத்தின் பண்பே பழிப்புக்கிடமாகும்; அது பண்பு உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கு அறிகுறி. ஆனால், அதனால் உங்களுடைய உள்ளத்திலுள்ள கருத்துக்கள் எனது எடுத்துக்காட்டுகளால் மாறவேண்டுமென்பதல்ல. என்னுடைய கருத்துக்களை வாங்கி உங்களுடைய அறிவென்னும் உரைகல்லில் உரைத்து சிந்தனைத் துலாக்கோலால் நிறுத்து, சரியா தப்பா என்று பார்க்கவேண்டும். சரியானதை ஒத்துக் கொள்ளவேண்டும்; ஒத்துக்கொண்டதை ஓம்ப வேண்டும். இது பண்புள்ளவர்கள் செய்யவேண்டிய கடமை; பல்கலைக் கழகம் வளர்க்க வேண்டிய பொருள். இது எனது சொந்த சார்பில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிற நல்லுரை.

"நிலையும் நினைப்பும்" என்ற தலைப்பை உங்கள் தொடக்கவிழாச் சொற்பொழிவுக்குத் தந்த பொழுது, நான் சற்று சிந்தித்துப் பார்த்தேன், இன்றைய என் நிலையும் நினைப்பும், மக்களது நிலை-