பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

முடிப்ப முடித்து, பின் பூசுவ பூசி,
உடுப்பு உடுத்து, உண்ப உண்ணா. இடித்து இடித்துக்
கட்டுரை கூறின், செவிக்கொளா கண் விழியா,
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்.30

'ஒற்றின் தெரியா, சிறைப்புறத்து ஓர்தும்!' எனப்
பொன்—தோள் துணையாத் தெரிதந்தும், குற்றம்
அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை; சென்று
முறையிடினும், கேளாமை அன்று.31

ஏதிலார் யாதும் புகல, இறைமகன்
கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு;—நேர் நின்று,
'காக்கை வெளிது' என்பார் என் சொலார்? 'நாய்க் கொலை
சால்பு உடைத்து' என்பாரும். உண்டு.32

கண்கூடாப் பட்டது கேடு எனினும், கீழ்மக்கட்கு
உண்டோ உணர்ச்சி? மற்று இல்லாகும்;—மண்டு எரி-
தான் வாய்மடுப்பினும், மாசுணம் கண் துயில்வ;
பேரா, பெருமூச்செறிந்து.33

நட்புப் பிரித்தல், பகை நட்டல், ஒற்று இகழ்தல்,
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல், தக்கார்
நெடுமொழி கோறல், குணம் பிறிதாதல்.—
கெடுவது காட்டும் குறி.34

பணியப் படுவார் புறங்கடையராக,
தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு, அணியது
இளையாள் முயக்கு எனினும், சேய்த்தன்றே, மூத்தாள்
புணர் முலைப் போகம் கொளல்.35

கண் நோக்கு அரும்பா, நகை முகமே நாள்மலரா,
இன்மொழியின் வாய்மையே தீம் காயா, வண்மை
பலமா, நலம் கனிந்த பண்புடையார் அன்றே,
சலியாத கற்ப தரு.36

வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்,
தூங்கும் களிறே துயர் உறா: ஆங்கு அது கொண்டு,
ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால்,
ஆரும் கிளையோடு அயின்று.37