அறத்துப்பால் - இல்லறவியல் - பொறையுடைமை
117
இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக்காட்டுவமை. ஒரால் ஒருவுதல், உவமியம் பொருள்.
154.நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
(இ-ரை.) நிறையுடைமை நீங்காமை வேண்டின் - ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - அவனாற் பொறையுடைமை பேணிக்காத் தொழுகப்படும்.
பொறையுடைமையின்றி நற்குண நிறைவில்லை யென்றவாறு. படும் என்பது வேண்டும் என்று பொருள்படும் துணைவினையுமாம்.
155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
(இ-ரை.) ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - ஆனால், அத் தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக்கொள்வர்.
தீங்கு செய்தவனைத் தண்டித்தவரும் அத் தீங்கு செய்தவனையொத்தலின் 'ஒன்றாக வையார்' என்றார். பொன்போற் பொதிதலாவது மிக மேன்மையாகப் போற்றுதல். ஏகாரம் தேற்றம்.
156.ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
(இ-ரை.) ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தாாக்கு உண்டாவது அவ் வொருநாளையின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - ஆனால், அத் தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.
'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால், பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்