பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மருத்துவ விஞ்ஞானிகள்


லிஸ்டரின் புகழ் வாழ்வெனும் மாளிகைக்குரிய அருந் தூணாக நின்று கொண்டிருந்ததுதான்.

அவருடைய மனத்தை மகிழ்ச்சிப் படுத்த எண்ணிய அரசு பிரசிடெண்ட் ஆஃப் ராயல் சொசைட்டிக்கு 1897-ஆம் ஆண்டில் லிஸ்டரைத் தலைவராகத் தேர்வு செய்தது. இந்தப் பதவி சாதாரணமானதன்று. உலக மக்களால் மதிக்கப்படும் மிகப் பெரிய பதவியாகும். குறிப்பாக இங்கிலாந்து மக்களாலும், அரசாலும் போற்றப்படும் முக்கியமான பதவியாகும்.

எனவே, அந்தப் பதவியை ஏற்று அதன் முன்னேற்ற பொறுப்புகளிலேயே அவருக்கு கவனம் திரும்பியது. அதற்காகத்தான் லிஸ்டருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. இல்லையென்றால் மனைவி இழப்பிலேயே ஏக்கமாகி அவர் மாண்டு போயிருக்கக் கூடும்.

இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்டு அவர்களால் 1903-ஆம் ஆண்டில் தலைசிறந்த மருத்துவர்கள் பனிரெண்டு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுள் ஜோசப் லிஸ்டர் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜோசப் லிஸ்டரின் பிறந்த நாள் விழா, மிகச் சிறப்பாக இங்கிலாந்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு உலக மருத்துவர்களில் பெரும்பான்மையோர் வருகை தந்து கலந்து கொண்டார்கள். விழா மிகக் கோலாகலமாக நடந்தது.

எதிர்பாரத நிலையில், ஜோசப் லிஸ்டர் என்ற அறுவை சிகிச்சை மேதை, தனது 85-ஆம் வயதில்; 1912-ஆம் ஆண்டில் மறைந்தார். அறுவை சிகிச்சை விஞ்ஞானியான ஜோசப் லிஸ்டர் உலகையே சோகத்தில் மூழ்கடித்து விட்டுக் காலமாகி விட்டார்!

ஜோசப் லிஸ்டரின் ஆண்டிசெப்டிக் சர்ஜரி எனப்படும் புதிய அறுவை சிகிச்சை முறையால் பயன் பெற்ற இலட்சக் கணக்கான நோயாளிகள், ஒவ்வொரு நாட்டிலும் கண்ணிர் சிந்தினார்கள். வாழ்க, ‘நச்சுத்தடை அறுவை’ சிகிச்சை முறை என்று மருத்துவ உலகம் இன்றும் தலை வணங்கி - அந்த மருத்துவ விஞ்ஞானியை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது!