திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 125:
 
;உரைவிளக்கம்: 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்குபாலும் தம் கருத்தோடுகூடிய பொருள் ஆற்றலாற் கொண்டார், ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே யாகலின். சினம் என்னும் நெருப்பு என்ற விதப்பு,<sup>3</sup> உலகத்து நெருப்புச் சுடுவது, தான் சேர்ந்தவிடத்தையே இந்நெருப்புச் சேராதவிடத்தையுஞ் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு இனம் என்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதிமொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகநோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், அகற்றும் என்பது பொருளாகக் கொள்க. 'ஏமப்புணை' ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனமென்னும் ஏமப்புணை' என்ற ஏகதேசஉருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்துரைக்க. எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.
:<small>3.வேண்டியதொன்றை முடித்தற்கு வேண்டாததொன்றைக் கூறுதல்.</small>
 
 
==குறள்: 307 (சினத்தைப்பொருள்)==
 
 
;சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
;நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (07)
 
 
;சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
;நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று.
 
 
 
;இதன்பொருள்: சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு= சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கட் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று= நிலத்தின்கண் அறைந்தவன் கை அந்நிலத்தை உறுதல் தப்பாதவாறு போலத் தப்பாது.
 
 
;உரைவிளக்கம்: வைசேடிகர்,<sup>4<sup> பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப் பொருள் என்றாற் போல ஈண்டுக் 'குணம்' 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது.
:இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
:<sup>4.விசேஷம் என்னும் பதார்த்தத்தை (கணாதரது நியாயமதத்தை)அங்கீகரித்தவர் வைசேடிகர்,<sup>.