திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
 
 
;==குறள்: 341 (யாதனின்)==
 
 
வரிசை 29:
 
 
;==குறள்:342 (வேண்டின் உண்டாக)==
 
 
வரிசை 47:
;உரைவிளக்கம்: அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனமொழிமெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறி்க்கட் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். 'இன்பங்கள்' என்பதும் 'காலம் என்பதும்' வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.
 
 
==குறள்: 343 (அடல்வேண்டும்)==
 
 
;அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
;வேண்டிய வெல்லா மொருங்கு (03)
 
 
;பதப்பிரிப்பு: அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
:வேண்டிய எல்லாம் ஒருங்கு.
 
 
;இதன்பொருள்: ஐந்தன் புலத்தை அடல் வேண்டும்= வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்= கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற் பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
 
 
 
;உரைவிளக்கம்: 'புலம்' என்றது அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானுமன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டுநெறியாகிய யோகஞானங்களிற் செலுத்தாமையின், அதனை 'அடல்வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள்மேல் செலலின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டியவெல்லாம் ஒருங்கு விடல்வேண்டும்' என்றும் கூறினார்.
 
 
 
==குறள்: 344 (இயல்பாகும்)==
 
 
 
;இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
;மயலாகு மற்றும் பெயர்த்து (04)
 
 
;பதப்பிரிப்பு: இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
:மயல் ஆகும் மற்றும் பெயர்த்து.
 
 
;இதன்பொருள்: ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பாகும்= பற்றப் படுவது ஒருபொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்; உடைமை பெயர்த்து மற்றும் மயலாகும்= அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குதற்கு ஏதுவாம்.
 
 
;உரைவிளக்கம்: இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம் 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். 'பெயர்த்தலான்' என்பது திரிந்து நின்றது. நோன்பைப் பெயர்த்தலான் என வேற்றுமைப் படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து.
:இவை நான்குபாட்டானும், எனது என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.