திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 84:
;உரைவிளக்கம்: இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம் 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். 'பெயர்த்தலான்' என்பது திரிந்து நின்றது. நோன்பைப் பெயர்த்தலான் என வேற்றுமைப் படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து.
:இவை நான்குபாட்டானும், எனது என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.
 
 
==குறள்: 345 (மற்றுந்தொடர்ப்பாடு)==
 
 
;மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
;லுற்றார்க் குடம்பு மிகை (05)
 
 
;பதப்பிரிப்பு: மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
:உற்றார்க்கு உடம்பும் மிகை.
 
 
 
;இதன்பொருள்: பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை= பிறப்பு அறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவியாகிய உடம்பும் மிகையாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்= ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்!
 
 
;உரைவிளக்கம்: 'உடம்பு' என்ற பொதுமையான், உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்துவகை இந்திரிய உணர்வோடும், ஐவகை வாயுக்களோடும், காமவினை விளைவுகளோடும் கூடிய மனம்; இது நுண்ணுடம்பு எனவும்படும். இதன்கண் பற்று நிலையாமை உணர்ந்ததுணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப<sup>[1]</sup>. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றானாய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்புமிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை எய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும்.
:இதனான் அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.
 
<small>[1]. குறள், 350.</small>
 
 
 
==குறள்: 346 (யானெனதென்னும்)==
 
 
;யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
;குயர்ந்த வுலகம் புகும் (06)
 
 
 
;பதப்பிரிப்பு: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
:உயர்ந்த உலகம் புகும்.
 
 
 
;இதன்பொருள்: யான் எனது என்னும் செரு்ககு அறுப்பான்= தான் அல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபில்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்= வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.
 
 
;உரைவிளக்கம்: மயக்கம்- அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதிமொழிகளானும், யோகப்பயிற்சியானும் அவை யான் எனது அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
:இதனான் இவ்விருவகைப் ப்றறினையும் விட்டார்க்கே வீடுளது என்பது கூறப்பட்டது.
 
 
 
==குறள்: 347 (பற்றிவிடாஅ)==
 
 
;பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
;பற்றி விடாஅ தவர்க்கு (07)
 
 
 
;பதப்பிரிப்பு: பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
:பற்றி விடாஅதவர்க்கு.
 
 
;இதன்பொருள்: பற்றினைப் பற்றி விடாஅதவர்க்கு= இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை; இடும்பைகள் பற்றி விடாஅ= பிறவித்துன்பங்கள் இறுகப்பற்றி விடா.
 
 
;உரைவிளக்கம்: இறுகப்பற்றுதல்= காதல்கூர்தல். விடாதவர்க்கு என்பது வேற்றுமைமயக்கம்.
 
:இதனால் இவை விடாதவர்க்கு வீடில்லை என்பது கூறப்பட்டது.
 
 
 
==குறள்: 348 (தலைபபட்டார்)==
 
 
;தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
;வலைப்பட்டார் மற்றை யவர் (08)
 
 
 
;பதப்பிரிப்பு: தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
:வலைப்பட்டார் மற்றையவர்.
 
 
 
;இதன்பொருள்: தீரத்துறந்தார் தலைப்பட்டார்= முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்= அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
 
 
 
;உரைவிளக்கம்: 'முற்றத்துறத்த'லாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச்செய்தல். துணிவுபற்றித் 'தலைப்பட்டார்' என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின் 'மயங்கி' என்றும் கூறினார்.