அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 985:
உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. <br>
ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும். <br>
</td>
<tr>
<td>67:</td>
<td>
67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு <br>
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம், <br>
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும் <br>
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. <br>
</td>
<td>
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், <br>
மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் <br>
மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், <br>
சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, <br>
ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர். <br>
</td>
<tr>
<td>68:</td>
<td>
68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும், <br>
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் <br>
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே <br>
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. <br>
</td>
<td>
ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும்,<br>
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். <br>
சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். <br>
அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்). <br>
</td>
<tr>
<td>69:</td>
<td>
69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா <br>
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா <br>
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-- <br>
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே, <br>
</td>
<td>
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! <br>
நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். <br>
அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். <br>
சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். <br>
நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும். <br>
</td>
<tr>
<td>70:</td>
<td>
70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண் <br>
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும், <br>
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப் <br>
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. <br>
</td>
<td>
ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். <br>
கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். <br>
பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, <br>
மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் <br>
எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன். <br>
</td>
<tr>
</table>
 
 
67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.
 
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.
 
68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
 
ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
 
69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
 
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.
 
70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
 
ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.
 
71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது