திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை
 
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்க்கை
 
வரிசை 21:
<br>1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன்.
<br>உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு
<br>காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். [1]
<br>2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன்.
<br>வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது.
வரிசை 29:
<br>நாங்கள் முத்திரையிடும்வரை
<br>நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்"
<br>என்று அவர்களிடம் கூறினார். [2]
<br>4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைப்பற்றிச் சொல்லக் கேட்டேன்.
<br>இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள்
வரிசை 68:
<br>"இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்;
<br>தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து
<br>வெண்மையாக்கிக் கொண்டவர்கள். [3]
<br><blockquote>15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு
<br>அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்;
<br>அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
<br>16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா;
<br>கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. [4]
<br>17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்;
<br>வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.
<br>கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்." [5]</blockquote>
 
 
;குறிப்புகள்
[1] 7:1 = எரே 49:36; தானி 7:2; செக் 6:5.
<br>[2] 7:3 = எசே 9:4,6.
<br>[3] 7:14 = தானி 12:1; மத் 24:21; மாற் 13:19.
<br>[4] 7:16 = எசா 49:10.
<br>[5] 7:17 = திபா 23:1-2; எசா 25:8; 49:10; எசே 34:23.
 
 
வரி 93 ⟶ 101:
<br>அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது
<br>இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு
<br>அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. [1]
<br>4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து
<br>வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.
வரி 99 ⟶ 107:
<br>பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி,
<br>மண்ணுலகின்மீது வீசியெறிந்தார்.
<br>உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின. [2]
 
===முதல் நான்கு எக்காளங்கள்===
வரி 110 ⟶ 118:
<br>நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது;
<br>மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது;
<br>பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது. [3]
 
<br>8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
வரி 122 ⟶ 130:
<br>உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று
<br>வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள்
<br>மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது. [4]
<br>11 அந்த விண்மீனுக்கு 'எட்டி' என்பது பெயர்.
<br>ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது.
<br>இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர். [5]
 
<br>12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
வரி 133 ⟶ 141:
<br>இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது;
<br>பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது.
<br>இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று. [6]
 
<br>13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன்.
வரி 139 ⟶ 147:
<br>"மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள்.
<br>அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!" என்று கத்தக் கேட்டேன்.
 
 
;குறிப்புகள்
[1] 8:3 = விப 30:1,3; ஆமோ 9:1.
<br>[2] 8:5 = விப 19:16; லேவி 16:12; எசே 10:2; திவெ 11:19; 16:18.
<br>[3] 8:7 = விப 9:23-25; எசே 38:32.
<br>[4] 8:10 = எசா 14:12.
<br>[5] 8:11 = எசே 9:15.
<br>[6] 8:12 = எசா 13:10; எசே 12:7; யோவே 2:10,31; 3:15.