மணிமேகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: காதைகள்5 முதல் 30 வரையிலான உட்பிரிவுகள் உருவாக்கம்
சிNo edit summary
வரிசை 1:
== ==
#இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து<br />விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி<br />பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி<br />தென் திசைப் பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்<br />சாகைச் சம்பு தன் கீழ் நின்று<br />மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு<br />வெந் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற<br />சம்பு என்பாள் சம்பாபதியினள்<br />செங்கதிர்ச் செல்வன் திருக் குலம் விளக்கும்<br />கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட<br />அமர முனிவன் அகத்தியன் தனாது<br />கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை<br />செங் குணக்கு ஒழுகி அச் சம்பாபதி அயல்<br />பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற<br />ஆங்கு இனிது இருந்த அருந் தவ முதியோள்<br />ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு<br />ஆணு விசும்பின் ஆகாயகங்கை<br />வேணவாத் தீர்த்த விளக்கே வா என<br />பின்னிலை முனியாப் பெருந் தவன் கேட்டு ஈங்கு<br />'அன்னை கேள் இவ் அருந் தவ முதியோள்<br />நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என<br />பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய<br />கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி<br />கோள் நிலை திரிந்து கோடை நீடினும்<br />தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை<br />தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி<br />கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து<br />தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்<br />செம்மலர் முதியோன் செய்த அந் நாள்<br />என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர்<br />நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என<br />இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்<br />ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப்<br />பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என<br />சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்<br />வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்<br />மணிமேகலை தான் மா மலர் கொய்ய<br />அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்<br />ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்<br />பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்<br />பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன்<br />துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்<br />மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்<br />மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்<br />உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்<br />சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்<br />ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள்<br />தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும்<br />உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப்<br />பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்<br />உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி<br />'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்<br />தீபதிலகை செவ்வனம் தோன்றி<br />மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்<br />பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு<br />யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்<br />அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்<br />நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்<br />அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்<br />சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்<br />மற்று அப் பாத்திரம் மடக்கொடி ஏந்தி<br />பிச்சைக்கு அவ் ஊர்ப் பெருந் தெரு அடைந்ததும்<br />பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்<br />பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்<br />காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று <br />ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்<br />அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே<br />கொங்கு அலர் நறுந் தார்க் கோமகன் சென்றதும்<br />அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன்<br />வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி<br />மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்<br />அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்<br />காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன்<br />ஆய் இழை தன்னை அகலாது அணுகலும்<br />வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை<br />மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்<br />ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள்<br />தெய்வக் கிளவியின் தெளிந்த வண்ணமும்<br />அறை கழல் வேந்தன் 'ஆய் இழை தன்னைச்<br />சிறை செய்க' என்றதும் சிறைவீடு செய்ததும்<br />நறு மலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு<br />ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்<br />ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி<br />ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்<br />உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்<br />பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்<br />'நவை அறு நன்பொருள் உரைமினோ' என<br />சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும்<br />ஆங்கு அத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து<br />பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும்<br />புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து<br />மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்<br />தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு<br />'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும்<br />இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப<br />வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்<br />மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு<br />ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்
 
"https://ta.wikisource.org/wiki/மணிமேகலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது