நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 827:
''கலிநிலைத்துறை''
587: சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்,
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால், மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1
588: போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்,
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற,
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்,
ஆர்க்கிடு கோதோழி. அவன்தார்ச்செய்த பூசலையே. 2
589: கருவிளை யொண்மலர்காள். காயாமலர் காள்,
திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்,
திருவிளை யாடுதிண்டோ ள் திருமாலிருஞ் சோலைநம்பி,
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே. 3
590: பைம்பொழில் வாழ்குயில்காள். மயில்காள்.ஒண் கருவிளைகாள்,
வம்பக் களங்கனிகாள். வண்ணப்பூவை நறுமலர்காள்,
ஐம்பெரும் பாதகர்காள். அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4
591: துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்,மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள். தொகுபூஞ்சுனை காள்,சுனையில்
தங்குசெந் தாமரைகாள். எனக்கோர்சரண் சாற்றுமினே. 5
592: நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6
593: இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்,நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன் மனத்தேவந்து நேர்படிலே. 7
594: காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்,
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்,
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8
595: கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்நின்று தூங்குகின்றேன்,
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9
596: சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது,
வந்திழி யும்சிலம்பா- றுடைமாலிருஞ் சோலைநின்ற,
சுந்தரனை, சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த,
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே. (2) 10
== ==
|