நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 923:
''கலிநிலைத்துறை''
 
597: கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்,
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது, அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ. (2) 1
 
598: மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்,
மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்,
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது,எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே. 2
 
599: கோவை மணாட்டி. நீயுன் கொழுங்கனி கொண்டு,எம்மை
ஆவி தொலைவியேல் வாயழ- கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை- யார்க்கும்தம் பாம்புபோல்,
நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே. 3
 
600: முல்லைப் பிராட்டி.நீயுன் முறுவல்கள் கொண்டு,எம்மை
அல்லல் விளைவியே லாழிநங் காய்.உன்ன டைக்கலம்,
கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால், நானும் பிறந்தமை பொய்யன்றே. 4
 
601: பாடும் குயில்காள். ஈதென்ன பாடல்,நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்,
ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து,
கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே. 5
 
602: கணமா மயில்காள். கண்ணபி ரான்திருக் கோலம்போன்று,
அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்,
பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்,
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே. 6
 
603: நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்,உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்,
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து,எம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே ? 7
 
604: மழையே. மழையே. மண்புறம் பூசியுள் ளாய்நின்ற,
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற,
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே? 8
 
605: கடலே. கடலே. உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு, என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே. 9
 
606: நல்லஎன் தோழி. நாக ணைமிசை நம்பரர்,
செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்,
வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை,
வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே. (2) 10
 
606: நல்லஎன் தோழி. நாக ணைமிசை நம்பரர், செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென், வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை, வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே. (2) 10
== ==
 
"https://ta.wikisource.org/wiki/நாச்சியார்_திருமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது