நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1,306:
''அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்''
637: பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?-
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி,
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1
638: அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்,
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே?-
கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல, வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 2
639: மாலாய்ப் பிரந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே?-
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்,
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 3
640: கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத் தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 4
641: மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்,
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே?-
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்,
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5
642: தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்,
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே?-
உருவு கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்,
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோ மே. 6
643: பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே?-
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்,
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 7
644: வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை,
அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே?-
களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 8
645: நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி,
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே?-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய,
வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 9
646: பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே. (2) 10
|