பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அரிஅரவேலன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 27277 இல்லாது... |
||
வரிசை 4:
==(பிழையில்லா மெய்ப்பதிப்பு)==
வாளினை எடடா!
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!
கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்
----
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்
எக்கார ணத்தால்? என்பீ ராயின் ''(என்பீர் ஆயின் = என்பீராயின்'')
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவ ரிற்சுப் பிரமணி யென்று '''(15)''' ''(இருவரில் சுப்பிரமணி என்று)''
சொற் பாரதியைச் சோம சுந்தர
நற்பாரதி, புகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்
இங்குத் தலைமை ஏற்ற நானும் '''(20)'''
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் ''(சிறப்புறுத்தல் போல்)''
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன் முடிவுரை கூறுவேன் பின்பே--
----
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம் (25)
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடு இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ்?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித் (30)
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிறித்தவர் சூழ் இந்துக்களென்(று)
இருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு
மெச்சவும் காட்டுவோன் வேண்டு மென்றெண்ணி ( 35)
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
----
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவுகின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம் (40)
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற [[லெனினை]] ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க (45)
[[விக்டர் யூகோ]] மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் (50)
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
----
பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையினைக் கவிழ்க்கும் கவிமுரசு (55)
நீடுதுயில் நீக்கப் பாடி வந்தநிலா
காடுகமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன் புதிய
அறம்பாட வந்த அறிஞன் நாட்டிற் (60)
படரும் சாதிப் படைமருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
----
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும் (65)
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்,
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்,
கடவுளைக் குறிக்கும் அக்கவிதையும் பொருள்விளங் (70) (பொருள்விளங்கிட)
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்,
பொய்ம்மதம் பிறிதெனப் புளுகுவீர் என்றும்,
கொந்தும் என்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்,
பழமை அனைத்தையும் பற்றுக என்றும், (75)
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்,
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும், (எள் அத்தனை நிலை)
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும், (80) (பெண்ணால் என்று அறைக)
----
[[கலம்பகம்]] பார்த்தொரு கலம்ப கத்தையும்,
அந்தாதி பார்த்தோர் [[அந்தாதி]] தனையும்,
[[மாலை]] பார்த்தொரு மாலை தன்னையும்,
[[காவியம்]] பார்த்தொரு காவியந் தன்னையும்,
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று (85)
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்,
இன்றைய தேவையை எழுதேல் என்றும், (90)
முன்னாள் நிலையிலே முட்டுக என்றும்,
வழக்கா றொழிந்ததை வைத்தெ ழுதித்தான் (வழக்காறு ஒழிந்ததை)
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்,
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்,
நந்தமிழப் புலவர் நவின்றனர், நாளும் (95)
அந்தப் படியே அவரும் ஒழுகினர்;
----
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால், (சாற்று எனக்கேட்டால்)
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்ட தின்பத்தமிழ்! (அடைந்துஇருந்திட்டது இன்பத்தமிழ்)
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல் (100)
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
"வில்லினை யெடடா - கையில்
வில்லினை எடடா - அந்தப் (105)
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா"
என்று கூறி இருக்கும் பகையைப்
பகைத்தெழும் படிபகர லானான்
"பாருக் குள்ளே நல்ல நாடு- இந்தப் 'பாரதநாடு'
என்பது போன்ற எழிலும், உணர்வும் (110)
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
----
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
"தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு (நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்)
சூழ்கலை வாணர்களும் இவளென்று பிறந்தவள் (115)
என்றுண ராத இயல்பினளா மெங்கள்தாய்"
மக்கள் கணக்கும், வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்;
"முப்பது கோடி முகமுடையாள் உயிர் (120)
மொய்ம்புற வொன்றுடையாள் - அவள்
செப்பும் மொழி,பதி னெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடையாள்"
இந்நாட்டின் தெற்கெல்லை இயம்புவான்:
"நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று (125)
நித்தம் தவம்செய் குமரி யெல்லை"
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
----
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்களுக்கவன் வழங்குதல் கேட்பீர்
"இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் (130)
பதந்திரு இரண்டு மாறிப் பழிமிகுத் திழிவுற் றாலும்
விதம்தரு கோடி இன்னல் விளைத்தெனை யழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே"
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள்;
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் (135)
எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு"
"விடுதலை! விடுதலை! விடுதலை
!
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே" - என்றறைந்தார் அன்றோ?
----
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும் (140)
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" - என்றான் (145)
சினம்பொங்கும் ஆடவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்
"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா" என்று கோலம் புதுக்கினான்; (150)
பெண்உதட்டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
"அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும்"
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு (155)
வேண்டும் பண்பு, வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்:
----
"முனை முகத்து நில்லேல்" - முதியவள் சொல்லிது
"முனையிலே முகத்துநில்" - பாரதி முழக்கிது!
"மீதூண் விரும்பேல்" - மாதுரைத் தாள்இது (160)(மாது உரைத்தாள் இது)
"ஊண்மிக விரும்பு" - எனஉரைத்தான் பாரதி
மேலும் கேளீர் - கோல்கைக் கொண்டுவாழ்:
"குன்றென நிமிர்ந்துநில்" "நன்று கருது"
"நினைப்பது முடியும்" "நெற்றி சுருக்கிடேல்"
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப் (165)
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தெளிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக்கூற
இயலா தென்னுரை இதனொடு நிற்கவே. (170)
(பாரதிதாசன் பாடிய '''புதுநெறி காட்டிய புலவன்''' என்ற பாடல் முற்றும்.)
இந்தப் பாடலின் மொத்த அடிகள்: 170 (நூற்றெழுபது மட்டும்)
(இப்பாடல், 1946 ஆம் ஆண்டு "அனைத்திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் ஐந்தாவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையும் ஆகக் கூறப்பட்டது.)1
1.'''பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி,'''இரண்டாம் பதிப்பு.(முதற்பதிப்பு:1949),புதுச்சேரி:பாரதிதாசன் பதிப்பகம்,1952.
வரி 215 ⟶ 395:
(இப்பாடல் '''பஃறொடை வெண்பா''' யாப்பால் ஆனது)
===தேன்கவிகள் தேவை===
பொழுது விடியப் புதுவையிலோர் வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார் (05)
முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படிந்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை
----
அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி (10)
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளப்புகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச்சுடர்க் கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவது்ண்டோ நாங்கள்பெறும் பாக்கியத்தை?
----
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம் (15)
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார் (20)
----
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட்டரை இருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியில்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும் (25)
வாசித்தார் ஐயர் மலர்முகத்தில் வாட்டமுற்றார்
"என்னை வசனம் மட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்
பாட்டெழுத வேண்டாமாம் பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை" என்றுரைத்தார் (30)
----
பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் "சோர்வெ"ன்னும்
காரிருளில் கால்வைத்தார் ஊக்கத்தால் மீண்டுவிட்டார்
"பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?"
என்று மொழிந்தார் இரங்கினார் சிந்தித்தார் (35)
"நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை"யென்றார்
----
நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்
ஆங்கிலம் வல்ல கசின்ஸ் என்னும் ஆங்கிலவர்,
"நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை (40)
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குப் பாட்டெழுதித் தாருங்கள்"
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார், எம்மை அபிப்பிரா யம்கேட்டார்
"வேண்டும் எழுதத்தான் வேண்டு(ம்)"என்றோம், பாரதியார் (45)
"வேண்டு(ம்),அடி, எப்போதும் விடுதலை" என்(று)
ஆரம்பஞ் செய்தார், அரைநொடியில் பாடிவிட்டார்
----
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின் (50)
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்று
வீவீஎஸ் ஐயர் விருப்பத்தைப் பூர்த்திசெய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
----
ஆங்கிலவர், பாரதியார் ஆர்ந்த கவித்தேனை (55)
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் "தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்" என்றுரைத்தார்
தேவையில்லை என்றுமுன் செப்பிவிட்ட அம்மனிதர்
தேவையுண்டு, தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!(60)
தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண்(டு) அறிவித்தார் பின்னர்ப்
பயன்தெரிந்தார் நம்தமிழர்" என்றுரைத்தார் பாரதியார்
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள் (65)
வெல்ல வருந்திரு நாள்!
('''பாரதிதாசன்''' பாடிய '''தேன்கவிகள் தேவை''' என்ற பாடல் முற்றும்)
''இப்பாடலின் மொத்த அடிகள்: 66 (அறுபத்தாறு அடிகள் மட்டும்)'' --[[பயனர்:Meykandan|Meykandan]] 03:02, 9 பெப்ரவரி 2010 (UTC)
----
வரி 650 ⟶ 899:
===நாடக விமர்சனம்===
ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார், அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி (05)
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்
மயக்கம் வந்தால் படுத்துக்கொள் ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்! (10)
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான் தூங்கிவிட்டால் (15)
முடிவு நன்றா யிருந்திருக்கும் சிரமும்போம்!
பாரதிதாசன் பாடிய '''நாடகவிமரிசனம்''' பாடல் முடிந்தது.
இப்பாடல், [["நேரிசை ஆசிரியப்பா"]]வால் ஆனது.
இப்பாடலின் மொத்த வரிகள் 16 (பதினாறு வரிகள் மட்டும்)ஆகும்.
|