அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 5:
| previous =
| next =
| notes = ''}}
<br =='''அழகு'''==
<br>
(''எண்சீர் விருத்தம்'')
<poem>
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
::கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
::தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
::மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
::தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
::திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
::நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
::புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
::நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
::செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
::அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
::பழமையினால் சாகாத இளையவள் காண்!
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
::நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
</poem>
=='''கடல்'''==
(அறுசீர் விருத்தங்கள்)
===மணல், அலைகள்===
ஊருக்குக் கிழக்கே உள்ள
:: பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம் போல்
::மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ கல்வி
::நிலையத்தின் இளைஞர் போலஎ
பூரிப்பால் ஏறும் வீழும்;
::புரண்டிடும்; பாராய் தம்பி. (1)
<br>
===மணற்கரையில் நண்டுகள்===
வெள்ளிய அன்னக் கூட்டம்
::விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல்
::கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு
::மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளகள் ஓடி ஆடிப்
::பெரியதோர் வியப்பைச் செய்யும். (2)
<br>
புரட்சிக்கப் பால் அ மைதி
::பொலியுமாம். அதுபோல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
::கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
::கடலிடை அமைதி அன்றோ!
பெருநீரை வான்மு கக்கும்;
::வான்நிறம் பெருநீர் வாங்கும்! (3)
<br>
===கடலின் கண்கொள்ளாக் காட்சி===
பெரும்புனல் நிலையும், வானிற்
::பிணந்த அக் கரையும், இப்பால்
ஒருங்காக வடக்கும் தெற்கும்
::ஓடு நீர்ப் பரப்பும் காண
இருவிழிச் சிறகால் நெஞ்சம்
::எழுந்திடும்; முழுதும் காண
ஒருகோடிச் சிறகு வேண்டும்
::ஓகோகோ எனப்பின் வாங்கும்! (4)
<br>
===கடலும் இளங்கதிரும்===
எழுந்தது செங்க திர்தான்
::கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்!
::வெளியெலாம் ஓளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்ப ரப்பின்
::முழுதும்பொன் னொளிப றக்கும்.
பழங்கால இயற்கை செய்யும்
::புதுக்காட்சி பருகு தம்பி! (5)
<br>
===கடலும் வானும்===
அக்கரை சோலை போலத்
::தோன்றிடும்! அந்தச் சோலை,
திக்கெலாம் தெரியக் காட்டும்
::இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்
கைக்கொள்ள அம்மு கில்கள்
::போராடும்! கருவா னத்தை
மொய்த்துமே செவ்வா னாக்கி
::முடித்திடும்! பாராய் தம்பி! (6)
<br>
=== எழுந்த கதிர் ===
இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே
::இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்;
::எழுந்தன கைகள் கொட்டி!
ஒளிந்தது காரி ருள்போய்!
::உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னிண றத்தை
::எங்கணும் இறைக்க லானான். (7)
<br>
=== கடல் முழக்கம் ===
கடல்நீரும், நீல வானும்
::கைகோக்கும்! அதற் கிதற்கும்
இடையிலே கிடைக்கும் வெள்ளம்
::எழில்வீணை; அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
::நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
::வண்கடல் பண்பா டல் கேள்! (8)
<br>
===நடுப்பகலிற் கடலின் காட்சி===
செழுங்கதிர் உச்சி ஏறிச்
::செந்தணல் வீசு தல்பார்!
புழுங்கிய மக்கள் தம்மைக்
::குளிர்காற்றால் புதுமை செய்து
முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
::முழுவதும் வாழ்விற் செம்மை
வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
::வளர்கின்ற கடல்பார் தம்பி! (9)
<br>
===நிலவிற் கடல்===
பொன்னுடை களைந்து, வேறே
::புதிதான முத்துச் சேலை
தன்இடை அணிந்தாள் அந்தத்
::தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்; அதோபார்
::எழில் நிலா ஒளிகொட் டிற்று!
மன்னியே வாழி என்று
::கடலினை வாழ்த்தாய் தம்பி. (10)
=='''தென்றல்'''==
===மென்காற்றும் வன்காற்றும்===
அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில்
கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச்
செயினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்! (11)
<br>
தென்னாடுபெற்ற செல்வம்
உன்னிடம் அமைந் திருக்கும்
உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாடுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்? (12)
<br>
===தென்றலின் நலம்===
குளிர்நறுஞ் சந்தனஞ் சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே
மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன்
வரவினை வாழ்த்தா ருண்டா? (13)
<br>
===அசைவின் பயன்===
உன்அரும் உருவம் காணேன்
ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை
அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ? (14)
<br>
===தென்றலின் குறும்பு===
உலைத்தீயை ஊது கின்றாய்
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை! (15)
<br>
===குழந்தையும் தென்றலும்===
இழந்திட்டால் உயிர்வா ழாத
என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்
குளிர்செய்து, மேனி யெங்கும்
வழிந்தோடிக் கிலு கிலுப்பை
தன்னையு ம் அசைப்பாய் வாழி. (16)
<br>
===தென்றல் இன்பம்===
இருந்தஓர் மனமும், மிக்க
இனியதோர் குளிரும் கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு
மாற்றாகிப் பின்னர் வானிற்
பருந்தாகி இளங்கி ளைமேற்
பறந்தோடிப் பாடு கின்றாய்! (17)
<br>
===தென்றலின் பயன்===
எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே
எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
"எழுதிய தாளை நீ ஏன்
கிளப்பினை" என்று கேட்டேன்,
"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை! (18)
<br>
===தென்றலிற்கு நன்றி===
கமுகொடு, நெடிய தென்னை,
கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை,
உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்க
தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ? (19)
<br>
===தென்றலின் விளையாட்டு===
களச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளயா டிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ! (20)
=='''காடு'''==
===மலைப்பு வழி===
நாடினேன்; நடந்தேன்; என்றன்
வரி 446 ⟶ 263:
மரங்களோ பேசவில்ல!
===வழியடையாளம்===
மேன் மேலும் நடந்தேன்; அங்கே
வரி 464 ⟶ 281:
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.
===காட்டின் அழகு===
வன்மை கொள் பருக்கைக் கல்லின்
வரி 482 ⟶ 299:
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.
===மயிலின் வரவேற்பு===
மகிழ்ந்துநான் ஏகும் போதில்
வரி 500 ⟶ 317:
நற்பாதை காட்டும் என்றே.
===தமிழா நீ வாழ்க===
முகத்திலே கொடுவாள் மீசை
வரி 518 ⟶ 335:
தமிழா நீ வாழ்க என்றேன்.
===வேடன் வழி கூறினான்===
"போம் அங்கே! பாரும் அந்தப்
வரி 536 ⟶ 353:
வழிச்செல்வீர்" என்றான் சென்றேன்.
===காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்===
செருந்தி, யாச்சா, இலந்தை,
::தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
::பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு முங்கில்; இரு குரங்கு
::கண்டேன் பொன் னூசல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
::கோணல்மா மரமும் கண்டேன்!
===பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது===
ஆனைஒன் றிளம ரத்தை
::முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனை ஒன் றணுகும்; அங்கே
::புலி ஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
::யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
::அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.
===மயிலுக்கு கரடி வாழ்த்து===
இழந்தபெட் டையினைக் கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
தனிமயிலால், அடைத் "தேன்"
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.
===பயன்பல விளைக்கும் காடு===
ஆடிய கிளைகள் தோறும்
கொடிதொங்கி, அசையும் ! புட்கள்
பாடிய படியி ருக்கும் !
படைவிலங் கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும் !
காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும்;
பயன்தந்து நிற்கும் காடே !
='''குன்றம்'''=
==மாலை வானும் குன்றமும்==
வரி 792 ⟶ 578:
புகைதல்போல் தோன்றும் குன்றம்!
='''ஆறு'''=
==நீரற்ற ஆற்றுப்பாதை==
வரி 975 ⟶ 761:
='''செந்தாமரை'''=
==நீர், இலை, நீர்த்துளிகள்==
வரி 2,767 ⟶ 2,553:
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!
===படைத் தமிழ்===
இருளினை வறுமை நோயை
::இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றை நான்
::ஒருவனே மிதிப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
::நான் அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
::பூக்காடு; நானோர் தும்பி!
</poem>
'''(முற்றும்)'''
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
|